Published : 11 Dec 2021 03:13 AM
Last Updated : 11 Dec 2021 03:13 AM

பட்டா மாறுதல் சிறப்பு முகாம் :

சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் அரசம்பட்டு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வட்டாட்சியர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் குமரவேல், மண்டல துணை வட்டாட்சியர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் உஷாராணி வடிவேல் வரவேற்றார்.

விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்கக்கோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதில், வட்ட துணை நில ஆய்வாளர் மணிமாறன், நெடுங்குணம் வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, தன்னார் வலர் கன்னியப்பன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சந்திரசேகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் அப்சர், கலைவேந்தன், வினோத், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x