கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :

கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

ஆவுடையார்கோவில் அருகே ஊர்வணியில் உள்ள சுல்லானி கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆமாஞ்சி கண்மாய்க்கு செல்லும். இவ்விரு கண்மாய்களுக்கும் இடையே செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால், முழுமையாக ஒரு கண்மாயில் இருந்து மற்றொரு கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. இதையடுத்து, நீர்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பணியாளர்கள், பொக்லைன் மூலம் நேற்று கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in