Published : 10 Dec 2021 03:08 AM
Last Updated : 10 Dec 2021 03:08 AM

போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது :

கரூர் கருப்பாயி கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் கவுதம்(20), கட்டிட தொழிலாளி. இவர், கரூரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 7-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவுதமை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x