Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

வேலைவாங்கித் தருவதாக கூறிரூ.10.80 லட்சம் மோசடி செய்ததாக தி.கோடு இளைஞர் மீது புகார் - :

மின் வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ 10.80 லட்சம் மோசடி செய்ததாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளைஞர் மீது நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த பொறியாளர் கார்த்திக் என்பவர் அளித்துள்ள புகார் மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர் நான் தொழில்முனைவோர் படிக்கும்போது எனக்கு வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது நான் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை கூறினேன். அதற்கு தனது மகன் மேகவர்மன் (32), முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக பணிபுரிகிறார். அவர் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாங்கித் தவதாகவும் கூறினார்.

இதைநம்பி மேகவர்மன் வங்கிக் கணக்கில் இரு தவணையாக ரூ. 8 லட்சமும், நேரில் ரூ.2.80 லட்சமும் கொடுத்தேன். எனினும், பணத்தை திருப்பித்தரவில்லை. இதுதொடர்பாக திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது அவரது காரை என்னிடம் வழங்கி 10 நாட்களுக்குள் பணத்தை வழங்கி காரை எடுத்துச் செல்வதாக கூறினார். காருக்கு தவணைத் தொகை கட்டாததால் வங்கி நிதி நிறுவனத்தினர் என்னை தொந்தரவு செய்கின்றனர்.

மேலும், இரண்டு ஆண்டுகளாகியும் பணம் திருப்பி தரவில்லை. எனவே கவுசல்யா மற்றும் அவரது மகன் மேகவர்மன் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x