Published : 09 Dec 2021 03:07 AM
Last Updated : 09 Dec 2021 03:07 AM

உரிமம், சாலை வரி செலுத்தாத 56 வாகனங்கள் பறிமுதல் : நாமக்கல் போக்குவரத்து துறை அலுவலர்கள் நடவடிக்கை

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, சாலை வரி செலுத்தாத மற்றும் உரிமம் இல்லாத 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மொத்தம் 4,323 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 842 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டன. மேலும், வரி செலுத்தாமல் ஓட்டிய வாகனங்களுக்கு ரூ.17 லட்சத்து 68 ஆயிரத்து 597 வரி வசூல் செய்யப்பட்டது. அதேபோல, 489 வாகனங்களுக்கு ரூ. 20 லட்சத்து 61 ஆயிரத்து 250 அபராதம் விதிக்கப்பட்டன. தவிர, உரிமம் இல்லாதது, சாலை வரி செலுத்தாதது உள்ளிட்ட 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x