திருடிய ஆடுகளை விற்க வந்த இளைஞர்கள் :

திருடிய ஆடுகளை விற்க வந்த இளைஞர்கள் :
Updated on
1 min read

சிவகங்கை வாரச்சந்தையில் திருட்டு ஆடுகள் விற்க வந்த இளைஞர்களிடம் வியாபாரிகள் விசாரித்ததும் தப்பியோடினர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆடு, மாடுகள் அதிக அளவில் திருடு போகின்றன. தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிவகங்கை வாரச் சந்தையில் 4 இளைஞர்கள் 4 ஆடுகளை விற்க வந்தனர்.

அவர்களிடம் வியாபாரிகள் விசாரித்தபோது, ஆடுகளுக்கு ஏற்ப விலையை சொல்ல தெரியவில்லை. இதையடுத்து வியாபாரிகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கியதை அடுத்து 4 இளைஞர்களும் ஆடு களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து 4 ஆடுகளையும் சிவகங்கை டவுன் போலீஸாரிடம் வியாபாரிகள் ஒப்படைத்தனர். இதில் 2 ஆடுகளை, அவற்றின் உரிமையாளர்கள் பெற்றுச் சென்றனர். திருடிய ஆடுகளை விற்க வந்த இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in