Published : 09 Dec 2021 03:09 AM
Last Updated : 09 Dec 2021 03:09 AM

பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு :

பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மூலம் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 104.5 அடியை எட்டியது முதல், பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 2134 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு 1500 கனஅடியும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடியும் திறக்கப்படுகிறது. இரண்டாம் போக சாகுபடிக்காக, தடப்பள்ளி அரக்கன்கோட்டை (கொடிவேரி) பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x