விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து - 11 மாணவர்கள் உட்பட 20 பேர் காயம் :

விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து -  11 மாணவர்கள் உட்பட 20 பேர் காயம் :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து, 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சித்தாத் தூர் கிராமத்தில் இருந்து அரசு நகரப் பேருந்து தடம் எண் 6 ஏ என்ற பேருந்து விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலை மார்க் கத்திலிருந்து விழுப்புரம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் – திருக்கோவிலூர் பிரதான சாலையில், ஆயந்தூர் கிராம எல்லை அருகே சாலையில் இருசக்கர வாகன ஓட்டி குறுக்கிட்டதால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக 5-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு, காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தால் விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விபத்துக் குறித்து காணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in