Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விருதுநகரில் 1,126 புகார்கள் பதிவு :

வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 'சகி' என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது.

இங்கு, பெண்களின் பாதுகாப்புக்காக அவசர சேவை மற்றும் ஆலோசனைகள், மருத்துவ சேவைகள், காவல் துறை சார்ந்த உதவிகள், உளவியல் ரீதியான உதவிகள், சட்ட உதவி, மனநல ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது.

இம்மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

இந்த மையத்தில் பெண்களின் குடும்பப் பிரச்சினை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம், பாலியல் வன்புணர்வு தொடர்பாக இதுவரை 1,126 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் உதவிகளுக்கு, 181 என்ற சேவை எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x