Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

மருத்துவர் வீட்டில் 18 பவுன் திருட்டு :

மதுரை கூடல்புதூர் சொக்க லிங்க நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சேகரன் (65). மருத் துவரான இவர், மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மதுரையிலுள்ள தனியார் மருத் துவமனையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றார். மீண்டும் வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ஆவணங்களை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x