புதிய காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு விரல் ரேகை பதிவு :

புதிய காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு விரல் ரேகை பதிவு :
Updated on
1 min read

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து, உடற்தகுதித் தேர்வு அண்மையில் நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, விரல் ரேகை பதிவு நடைபெறுகிறது.

மதுரை நகர் ஆயுதப்படை மைதானத்தில் இரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரல் ரேகை பதிவு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் நடந்த இந்நிகழ்வில் மாநகர விரல் பிரிவு நிபுணர்கள் தேர்வர்களின் விரல் ரேகைகளைப் பதிவு செய்தனர். ஆண், பெண் தேர்வர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in