Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM

சிவகிரியில் 43 மி.மீ. மழை பதிவு :

திருநெல்வேலியில் நேற்று காலை 8 மணி வரையிலான 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 24.4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாளையங்கோட்டையில் 24 மி.மீ., மூலக்கரைப்பட்டியில் 10 மி.மீ., சேரன்மகாதேவியில் 6 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ. மழை பெய்திருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம்136.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணிவரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 43 மி.மீ. மழை பதிவானது.ஆய்க்குடியில் 42 மி.மீ., சங்கரன்கோவிலில் 32 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலையில் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், கீழப்பாவூர், தென்காசி பகுதியில் பலத்த மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x