Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM

டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை மாற்ற வேண்டும்: பணியாளர் சங்கம் கோரிக்கை :

மதுரை: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. மாநில தலைவர் கு.பால்பாண்டியன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மு.ராஜசேகர், பொருளாளர் சு.அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலையச் செயலாளர் வே.ஆறுமுகவேல், மாநில துணைத் தலைவர் கோபிநாத், சென்னை மண்டல தலைவர் மு.கோதண்டன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தொகுப்பூதியத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளின் வேலை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விற்பனை நேரத்தை காலை 10 முதல் இரவு 8 மணி வரை என நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x