Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

ஜெயலலிதா நினைவு தினம் :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சங்கரன் கோவிலில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மார்தூவி அஞ்சலி செலுத்தினர். செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செய லாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி கொக்கிரகுளத் தில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா தலைமையில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நிர்வாகிகள் பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக, அமமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலை மையில் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x