Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

மீனாட்சியம்மன் கோயிலில் மார்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜை டிச.19-ல் ஆருத்ரா தரிசனம் :

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மீனாட்சியம்மன் கோயிலில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் டிச.16-ம் தேதி முதல் 2022 ஜனவரி 13 முடிய நடைபெற உள்ளன. இந்நாட்களில் அதிகாலையில் சேவார்த்திகளுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக திருஞானபால் வழங்கப்படும்.

இந்நாட்களில் வெளிக்கோபுர கதவுகள், அதிகாலையில் 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிகால பூஜை முடிந்து பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லக்கில் புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9 மணிக்கு பூஜை முடிந்தவுடன் கோயில் நடை சாத்தப்படும். அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

எண்ணெய்க்காப்பு உற்சவம் டிச.11 முதல் டிச.19 வரை நடைபெறும். டிச.11 முதல் 20-ம் தேதி வரை திருவெண்பா உற்சவம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடராஜப்பெருமானுக்கு உகந்த மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசனம் டிச.19 நள்ளிரவு முதல் 20ம் தேதி அதிகாலை வரை பிரதான அபிஷேகம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x