பெருந்துறை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சைக்கு தனிப்பிரிவு :

பெருந்துறை அரசு மருத்துவமனையில்  ஒமைக்ரான் சிகிச்சைக்கு தனிப்பிரிவு  :
Updated on
1 min read

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சைக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என மருத்துவக் கல்லூரி டீன் மணி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் ஒமைக்ரான் சிகிச்சைக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 10 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்காக தனியாக ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை மருத்துவ மனையில் தற்போது 70 கரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர், என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in