:

:
Updated on
1 min read

ஈரோடு / நாமக்கல்: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று 1030 இடங்களில் முகாம் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 13-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 467 மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் மக்கள் ஆர்வத்துடன் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஒமைக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் 50 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in