ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர் தர்ணா :

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர் தர்ணா  :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ரெட்டி யார்குப்பம் கிராமத்தில் அடிப் படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்குப்பம் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் சந்தோஷ்குமார். இவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறும்போது, “ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை மாற்று பணிக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீர் புகுந்து தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறை வேற்ற பலமுறை வலியுறுத்தியும் நட வடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

அவரிடம், கிராம நிர்வாக அலுவலர் வள்ளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in