Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

அரசு பேருந்து உட்பட 3 பேருந்துகள் தொடர் விபத்து :

காஞ்சிபுரம்

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தொடர் விபத்தில் 3 பேருந்துகள், ஒரு கார் ஆகியவை மோதிக் கொண்டன. இதில் 2 பெண்கள், சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அப்போது திடீரென லாரி உள்ளே வந்ததால் அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் வந்த 2 தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும் கார் உட்பட 4 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிறுவர்கள், 2 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் காவல் துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x