Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு :

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ஊராட்சி மன்றத் தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000லிருந்து ரூ.2,000-மாக உயர்த்திவழங்கி ஆணையிடப்பட்டுள் ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சி மன்ற தலை வர்களுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.2,000-மாக உயர்த்தி வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x