விபத்து இழப்பீடு வழங்காததால் - நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து பறிமுதல் :

விபத்து இழப்பீடு வழங்காததால் -  நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து பறிமுதல்  :
Updated on
1 min read

நாமக்கல் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தவருக்கு, இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள குன்னி மரத்தான் கோயில் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற வீரகுமார் என்பவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விபத்தில் உயிரிழந்த வீரகுமார் குடும்பத்தினருக்கு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மனுதாரர் சார்பில் ரூ.12. 45 லட்சம் இழப்பீடு கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, நாமக்கல் பேருந்து நிலையத்தில், சேலத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தினை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். நாமக்கல் பேருந்து பணிமனைக்கு பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in