Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

தி.மலையில் தடகள போட்டிகள் :

தி.மலையில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் தி.மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

மாநில தடகள சங்க துணைத் தலைவர் கம்பன் தலைமை வகித்தார். போட்டியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். 10, 14, 16, 18, 20 வயது என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவர் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே போட்டி நடத்தப்பட்டன. மாணவர் பிரிவில் 50 மீ., முதல் 5 ஆயிரம் மீட்டர் வரையும், மாணவிகள் பிரிவில் 50 மீ., முதல் 3 ஆயிரம் மீட்டர் வரை என போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. இதில், சுமார் 800-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தி.மலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x