Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

சேலத்தில் 11-ம் தேதி மக்கள் நீதிமன்றம் :

சேலம்

சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூர் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ளன.

மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி வழங்கப்படுகிறது. மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. நீதிமன்றங்களில் ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளில் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண முடியும்.

சமரசம் செய்துக் கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நலம் தொடர்பான வழக்குகள் , உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாக பிரிவினை வாடகை விவகாரங்கள்), விற்பனைவரி, வருமான வரி, சொத்துவரி பிரச்சினைகள் உள்ளிட்ட வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணலாம்.

மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x