Published : 03 Dec 2021 03:08 AM
Last Updated : 03 Dec 2021 03:08 AM

போக்ஸோவில் 2 பேர் மீது வழக்கு :

மதுரை

மதுரை மாவட்டம், திரு வாதவூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (19). இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.

பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் சின்னப்பாண்டி. இவர், கடந்த 1-ம் தேதி பேரையூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னப்பாண்டி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் திருமங்கலம் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வரு கின்றனர்.

சிறுமிக்கு திருமணம்

மதுரை மாவட்டம், மேலக் கோட்டையில் கடந்த 11-ம் தேதி சிறுமி ஒருவருக்கு திருமணம் நடந்ததாக திருமங்கலம் சமூக நல அலுவலர் ராமுத்தாய்க்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா காவல் நிலை யத்தில் அவர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த நல்லமுத்து மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் சுப்பிரமணியன், வளர்மதி, தேனி பச்சமலைக்கோட்டை யைச் சேர்ந்த சின்னச்சாமி, அன்னலட்சுமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x