Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

கண்டாச்சிபுரம் அருகே - தனியார் பள்ளி ஆசிரியர் மர்ம மரணம் :

கண்டாச்சிபுரம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின்(36). இவர் கண்டாச்சிபுரம் அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். அக்கிராமத்திலேயே அகஸ்டின் அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த அறையில் அவர் இறந்து கிடந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீஸார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அகஸ்டின் உடலை கைப்பற்றி விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x