Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM

விவசாயி கொலை வழக்கில் தொடர்புடையோரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் :

திருச்சியை அடுத்த மல்லியம் பத்து செங்கதிர்சோலை கிராமத் தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(50), விவசாயி. இவர், நவ.28-ம் தேதி ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய அனைவ ரையும் கைது செய்யும் வரை உடலை பெறமாட்டோம் என அவரது குடும்பத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன், தீபக் ஆகியோரை கைது செய்தனர். கொலை செய்ய அவர்களை தூண்டியதாக அந்தநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல், ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ரவி முருகையா, கதிர்வேல் ஆகியோரை கைது செய்யக் கோரி சிவக்குமாரின் உறவினர்கள் மற்றும் தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கத் தலைவர் பாச.ராஜேந்திரன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன்.முருகேசன் உள்ளிட்டோர் நேற்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் சு.சிவராசு பேச்சு வார்த்தை நடத்தியும், போராட் டத்தை தொடர்ந்த அவர்கள், மாலையில் டிஐஜி சரவண சுந்தரிடம் புகார் மனுஅளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x