Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

புதுக்கோட்டையில் - பழைய கட்டிடத்தை இடிக்கும்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர் மீட்பு :

புதுக்கோட்டையில் பழைய கட்டிடத்தை நேற்று இடிக்கும்போது, இடிபாடுக ளுக்குள் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் புதுக்கோட்டை கிழக்கு 2-ம் வீதி பகுதியில் வணிக பயன் பாட்டில் இருந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தை அண்மையில் வாங்கியுள்ளார். பின்னர், 20-க்கும் மேற் பட்ட தொழிலாளர்களைக் கொண்டு இக்கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்தக் கட்டிடம் அனுமதி பெறாமல் இடிக்கப்படுவதுடன், அதன் அருகில் அடுக்குமாடி வணிக கட்டிடங்கள் இருப் பதால் பாதுகாப்பான முறையில் இடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதியினர் புகார் அளித்தனர். எனினும், உரிய நடவ டிக்கை எடுக் கப்படவில்லை என கூறப் படுகிறது.

இந்நிலையில், நேற்று கட்டிடம் இடிக்கும் பணியின்போது, எதிர்பாராத வகையில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கிய வாண்டாக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.அரங்குளவன்(60), புதுக் கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த பி.பாண்டியன்(40), கே.மதுரைவீரன்(40), இவரது மகன் சத்தியமூர்த்தி(18), எம்.திருப்பதி(26), ஊனையூர் வி.லெட்சு மணன்(45) உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். காயமடைந்த 10 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸாருக்கு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, நகராட்சி அலுவலர் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில், கட்டிட உரிமையாளர் மருத்துவர் செந்தில் குமார், கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட அரங்குளவன் உட்பட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x