Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு :

அரசு வேலை வாங்கித் தருவதா கக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்தவர் மீது வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரிடம் மதுரை அய்யர் பங்களா பிருந்தாவன் 2-வது தெரு நகரில் வசிக்கும் ரத்தினவேல் மகன் மாரிக்கண்ணன் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது, தனக்கு அமைச்சர்களிடம் தனி செல்வாக்கு இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன், தனது மகனுக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏ.பி.ஆர்.ஓ) வேலை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு குறிப்பிட்ட தொகையை பேரம் பேசிய மாரிக்கண்ணன், முன்பணமாக ரூ.2 லட்சம் பெற்றுள்ளார். இதுதவிர மேலும் சிலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்ற மாரிக்கண்ணன், சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், மாரிக்கண்ணன் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x