Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM

கொலை வழக்கில் ஒருவர் கைது :

வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளி பகுதியில் ஆடு மேய்ப்பது தொடர்பான தகராறில் விவசாயி ஆறுமுகம் (50) கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளங்குளி சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் கடந்த 2 நாட்களுக்குமுன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த மாசான முத்து(20), மாரி செல்வம்(20), கங்காதரன்(21), மணி(20), சங்கர்(48) ஆகிய 5 பேரை வீரவநல்லூர் போலீஸார் தேடிவந்தனர். கங்காதரனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x