Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

கொல்லிமலையில் உரிமம் இல்லாத 10 துப்பாக்கிகள் போலீஸில் ஒப்படைப்பு :

நாமக்கல்: கொல்லிமலையில் அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் நடவடிக்கை எடுக்கப்படாது என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமா்ர் தாகூர் தெரிவித்தார். இதுதொடர்பாக கொல்லிமலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி நேற்று முன்தினம் 10 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை கொல்லிமலை மக்கள் வாழவந்திநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுவரை கொல்லிமலையில் இருந்து மட்டும் 112 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x