Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

வெள்ள பாதிப்பை பார்வையிட - ஆட்சியரை முற்றுகையிட்டு அழைத்து சென்ற சுயேச்சை எம்எல்ஏ :

கனமழையால் புதுச்சேரி உப்பனாற்றை ஒட்டியுள்ள உருளையன்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் உட்புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் பூர்வாகார்க் பார்வை யிடவில்லை என குற்றம்சாட்டிய சுயேச்சை எம்எல்ஏ நேரு, தன் ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினார்.

அப்போது ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்தார். அவரை ஆட்சியர் அலுவலகத்தினுள் அனுமதிக்காமல், தங்கள் பகுதியை ஏன் பார்வையிட வரவில்லை என கேள்வி எழுப் பினார். உடனடியாக ஆட்சியர் பூர்வாகார்க், இப்போதே பார் வையிட வருவதாகக் கூறினார்.

இதையடுத்து ஆட்சியரும், எம்எல்ஏவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான கண்டாக்டர் தோட்டம் குடியிருப்பு, புதுநகர், குபேர் நகர், அந்தோணியார் கோவில் வீதி, பாரதிபுரம், காமராஜர் சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

அப்பகுதி மக்கள், "அடிக்கடி வெள்ள நீர் வீடுகளில் புகுந்து, பொருட்கள் சேதம் அடைகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இப்பகுதியில் தூய்மையான குடிநீர் உட்பட உணவு கூட தரவில்லை என்று குற்றம் சாட்டினர். அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யஅதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். உடனடியாக உணவு தரவும், வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x