Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

மதுக்கடையை அகற்றக்கோரி பூட்டு போடும் போராட்டம் :

பெரியகுளம் அருகே வடுக பட்டியில் மதுக்கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில் பூட்டுப் போடும் போராட் டம் நடைபெற்றது.

தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் தலைமை வகித் தார். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் சு.வெண்மணி, ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலாளர் எஸ்.சவுந்திரபாண்டி, கிளைச் செயலாளர்கள் எஸ்.கணேசன், சி.ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

போராட்டத்தில் ஈடுபட் டோருடன் பெரியகுளம் காவல் துணைக்கண்காணிப்பாளர் முத்துக்குமார், டாஸ்மாக் துணை மேலாளர் மீனாட்சி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் மதுக்கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x