போலீஸ் காவல் முடிந்து கல்லூரி தாளாளர் பழநி சிறையில் அடைப்பு :

போலீஸ் காவல் முடிந்து கல்லூரி தாளாளர் பழநி சிறையில் அடைப்பு :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி தனியார் செவிலியர் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன். இவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதன்பேரில் 14 பிரிவுகளில் தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த விடுதி வார்டன் அர்ச்சனாவை உடனடியாகக் கைது செய்த போலீஸார் தலைமறைவான ஜோதிமுருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தவரை கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் மூன்று நாள் எடுத்து ஜோதிமுருகனிடம் விசாரணை நடத்திய போலீஸார் நேற்று மீண்டும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விடுதி வார்டன் அர்ச்சனாவும் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் ஜோதிமுருகனை டிசம்பர் 10-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பழநி சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in