Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM

மார்க்சிஸ்ட் மாநாடு :

விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் புதியநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டச் செயலாளராகக.ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயற்குழு உறுப்பினர்களாக கே.ஜி.பாஸ்கரன், ஆர்.மோகன், பி.கற்பகம், ராஜகுரு, எம்.சுடலைராஜ், ஆர்.எஸ்.துரைராஜ், எஸ்.பெருமாள், ஆர்.எஸ்.செண்பகம், பீர் முகம்மது ஷா தேர்ந்தெடுக்கப்பட்டனர். `ராதாபுரத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணியின் போது தோண்டப்பட்ட ஆற்று மணலில் ஊழல் நடைபெற்றுள்ளது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் பராமரிப்பு தொகையாக அரசுவழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைத்துஅரசு அதை நடத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x