Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM

விருதுநகர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் - 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை :

விருதுநகர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச் சினையைத் தொடர்ந்து இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(36). ஆவின் வாகன ஓட்டுநர். இவரது மனைவி லட்சுமிபிரியா(28). இவர்களது குழந்தைகள் தர்ஷிணிபிரியா(9), சிவசண்முகவேல்(7). சிவக் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினமும் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிவக்குமார் மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் வேதனையடைந்த லட்சுமிபிரியா நேற்று காலை மகள், மகனுடன் அப்பகுதியில் உள்ள கருவேலங் காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தன்னுடன் மகன், மகளை சேலையால் கட்டியதுடன், கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தார். இதில் நீரில் மூழ்கி 3 பேரும் இறந்தனர்.

நீண்ட நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாததை அடுத்து சிவக்குமார் அவர்களை தேடிச் சென்றார். கிணற்றின் அருகில் லட்சுமிபிரியாவின் செருப்பு கிடந்தது. கிணற்றில் மூவரும் இறந்து கிடப்பதைப் பார்த்தார்.

வச்சக்காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இருந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x