Published : 29 Nov 2021 03:08 AM
Last Updated : 29 Nov 2021 03:08 AM

கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது :

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி சண்முகத்தாய், நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் தொகையை கேட்க வந்த ஆலடியூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் சண்முகநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ராமசுப்பிரமணியன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சண்முகநாதனை கைது செய்தனர். இந்நிலையில், சண்முகநாதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில், சண்முகநாதன் குணடர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x