கரும்பு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை :

கரும்பு பயிர்களுக்கு  நிவாரணம் வழங்க கோரிக்கை :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கரும்பாயிரம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சிவகுரு, மாநில குழு உறுப்பினர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றார்.

கூட்டத்தில், கோத்தாரி சர்க்கரை ஆலையில் 2020-21 ஆண்டு பருவத்தில் பதிவு செய்து, விவசாயிகள் பயிரிட்ட கரும்புகளில் மாவுப் பூச்சி தாக்கி கரும்புகள் அழிந்து போனதால், கரும்பு விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை பதிவு அடிப்படையில் வெட்ட வேண்டும். ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு ரூ.5,000 வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in