அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை :

அரசு விடுதிகளில்  மாணவர் சேர்க்கை  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 20, பள்ளி மாணவியருக்கு 10, கல்லூரி மாணவர்களுக்கு 1, கல்லூரி மாணவியருக்கு 3, பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி விடுதி 1 என, மொத்தம் 35 விடுதிகள் உள்ளன.

இந்த விடுதிகளில் தங்கி, கல்வி பயில்வோருக்கு இலவசமாக உணவும், உறைவிடமும், 4 இணைச் சீருடைகளும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் டிசம்பர் 7-ம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in