Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

சிதம்பரம் அருகே மாணவிக்குபாலியல் தொல்லை: ஆசிரியர் கைது :

சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள சேதியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அசோக்குமார்(52) ஆசிரியராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறையில் பாடம் நடத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்த மாணவிக்கு ஆசிரியர் அசோக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் ஆசிரியர் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சிதம்பரத்தில் ஆசிரியர் அசோக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x