பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை :

பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை :
Updated on
1 min read

போடி தென்றல் நகரைச் சேர்ந்தவர் வீரக்குமார் (31). இவரது மனைவி லட்சுமி (25). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில் மனைவி மீது சந்தேகப்பட்டு வேலைக்குச் செல்லக் கூடாது என்று வீரக் குமார் தடுத்துள்ளார். அதை மீறி லட்சுமி வேலைக்குச் சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த வீரக்குமார், 6.5.2014-ல் போடி மீனாட்சி தியேட்டர் அருகே லட்சுமியை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தார். வீரக்குமாரை போடி நகர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வீரக்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் விதித்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in