Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வு :

திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவையின் 9 தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளரும், சிறு- குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலாளருமான ப.மகேஸ்வரி முன்னிலை வகித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. வெங்கட பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் ப.மகேஸ்வரி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x