Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

டாக்டர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையில் - இரைப்பை நோய்களை கண்டறிய அதிநவீன பரிசோதனை கருவி :

திருச்சியில் டாக்டர்.ஜி விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனையில் வயிறு மற்றும் இரைப்பை நோய்களை துரிதமாகவும், துல்லியமாகவும் கண்டறிய அதிநவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் மட்டுமே உள்ள இந்த கருவி, திருச்சியில் முதன்முறையாக இந்த மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை தலைவர் டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர்கள் அஷ்ரப், ஜமீர் பாஷா, என்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கருவி மூலம் உணவு குழாய் சுருங்கி இருத்தல், இருதயக்கோளாறு அல்லாத நெஞ்சுவலி, ஹிர்ஷ்ஸ்ப்ரங் நோய், உணவு குழாய் இயக்கம் கோளாறு உள்ளிட்டவற்றை கண்டறியலாம். முன்பு இந்நோய்களை கண்டறிய 24 மணிநேரம் தேவைப்பட்டது. தற்போது இந்த அதிநவீன கருவி மூலம் 7 நிமிடத்திலேயே கண்டறிந்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x