Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

மாணவிகள் தற்கொலை முயற்சி வழக்கில் : போக்சோ சட்டத்தில் இருவர் கைது :

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி, இரு தினங்களுக்கு முன்னர் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். சங்கோதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும், சிவகாசியைச் சேர்ந்த ராமர்(39), மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பேரூர் மகளிர் போலீஸாருக்கு மாற்றப்பட்டு, போக்சோ பிரிவில் ராமர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில், 16 வயது மாணவி பள்ளி கழிவறையில் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, துடியலூர் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியதில், அன்னூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணகுமார்(22), மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து சரவணகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x