Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரியதைத் தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இருதரப்பினரிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.லீலா அலெக்ஸ், தொழிலாளர் இணை ஆணையர் வ.லீலாவதி ஆகியோர் முன்னிலையில் கோவையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த 2014 மார்ச் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட கூலி உயர்வுடன் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், பிற ரகங்களுக்கு 20 சதவீதமும் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்க வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT