Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

சென்னையில் இன்று 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் கடந்த வாரம் 18, 21 ஆகிய நாட்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, இன்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 1,600இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் 7 லட்சத்து 91 ஆயிரத்து 24 பேர் உள்ளனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

எனவே, 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்கள் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு 2-ம் தவணை தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x