Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

புதுவையில் சாகச சுற்றுலா அறிமுகப்படுத்த திட்டம் :

புதுச்சேரியில் சாகச சுற்று லாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதோடு பண்டிகை காலத்திலும், புத்தாண்டு கொண்டாட்டத்திலும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுவை யிலும் சாகச சுற்றுலாவை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சுற்றுலா மேம்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இந்திய அரசு நிறுவன பவன்ஹான்ஸ் நிறுவன பொதுமேலாளர் கியான்பிரகாஷ் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டம் தொடர்பாக அமைச்சர் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரிக்கு சுற்றுலா மேம்பாட்டுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி தருவதுடன் சாகச சுற்றுலா திட்டங்களுக்கு அனுமதி தர மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் கோரியுள்ளோம். குறிப்பாக புதுச்சேரியை ஹெலிகாப்டரில் சுற்றி பார்ப்பது, புதுவையிலிருந்து காரைக்காலுக்கு ஹெலிகாப்டரில் பயணிப்பது குறித்து தற்போது ஆலோசித்துள்ளோம். 12 பேர் செல்லக்கூடிய கடலிலும், தரையிலும் இறங்கும் விமானத்தை புதுவையில் இயக்குவது குறித்தும் விவாதித்தோம். பண்டைய நகரமான அரிக்கன்மேட்டுக்கு சதுப்பு நில காடுகள் வழியாக படகுகள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்லும் திட்டமும் செயல்பாட்டுக்கு வர ஆராய்ந்துள்ளோம். இதற்கு மத்திய அரசிடம் துறை ரீதியான அனுமதி பெற்று நடைமுறைக்கு கொண்டு வரதிட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x