கூட்டுறவு வங்கியில் முறைகேடு: முன்னாள் மேலாளர் கைது :

கூட்டுறவு வங்கியில் முறைகேடு: முன்னாள் மேலாளர் கைது :
Updated on
1 min read

தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர்பாளையம் ரோடு டிஎஸ்கே நகரைச் சேர்ந்தவர் சேகர் (58). இவர், சின்னமனூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்தபோது, 5.8.2014 முதல் 29.1.2015 வரை நிரந்தர முதலீட்டு நிதியில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளார். இதன் மூலம் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 137 நிதியிழப்பு செய்துள்ளது ஆய்வின்போது தெரிய வந்தது. இதையடுத்து சேகர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் உத்தமபாளையம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சலீம் தேனி வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் செய்தார். அதன் பேரில் சேகரை சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் கைது செய்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in