நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட - திமுக-வில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட -  திமுக-வில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் :
Updated on
1 min read

நாமக்கல் கிழக்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இம்மாதம் 29-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்களின் விருப்ப மனுக்களை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.5,000, பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்ப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் நாமக்கல்லில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கவேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிட விரும்புவோர் கட்டணத்தில் பாதித்தொகையை செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in