ஆதார் சிறப்பு பதிவு முகாம் பெரம்பலூரில் இன்று தொடக்கம்�  :

ஆதார் சிறப்பு பதிவு முகாம் பெரம்பலூரில் இன்று தொடக்கம்�  :
Updated on
1 min read

புதிதாக ஆதார் பதிவு செய்தல், பழைய ஆதார் அட்டையில் செல்போன் எண்கள் மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்தல் ஆகியவற்றுக்காக ஆதார் சிறப்பு பதிவு முகாம் இந்திய தபால் துறை சார்பில் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று(நவ.25) தொடங்கி நவ.27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணமில்லை, பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்ய கட்டணம் ரூ.50 மற்றும் பயோ மெட்ரிக் திருத்தங்கள் செய்ய கட்டணம் ரூ.100. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in