Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

பழங்குடியினருக்கு பசுமை வீடுகள் கட்ட எதிர்ப்பு :

செய்யாறு அருகே இருளர் பழங்குடியினருக்கு பசுமை வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

செய்யாறு: தி.மலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாந்தாங்கல் கிராமம் அருகேயுள்ள பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருளர் பழங்குடியினர் சிலருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு, அங்கு பசுமை வீடு கட்டவும் அவர்களுக்கு அரசாணை வழங்கப்பட்டது. அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. இதற்கு, அருகில் உள்ள பாப்பாந்தாங்கல் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி செய்யாறு - ஆற்காடு சாலையில் நேற்று 30-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்த மோரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அருள்மொழி சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x